முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை அருகே இளம்பெண் படுகொலை

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் வைக்கம் பெரியார் நகரில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:43 PM
பகிர்:

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் வைக்கம் பெரியார் நகரில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று காலை வைக்கம் பெரியார் நகரில் வசிக்கும் சத்யா (26) கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை அருகில் உள்ளோர் கண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக அவருடைய உறவினர் ஒருவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதால் உறவினரே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு அவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.