முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கைக்குப் போர்க் கப்பல்கள் வழங்கக் கூடாது: ஜி.கே.வாசன்

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது.அப்படிக் கைது செய்தவர்களின் காவலை நீடித்துக் கொண்டே செல்வதும் பெரும் துயரமாக இருந்து வருகிறது.இலங்கை

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:45 PM
பகிர்:

இலங்கைக்குப் போர்க் கப்பல்கள் வழங்கக் கூடாது என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது.அப்படிக் கைது செய்தவர்களின் காவலை நீடித்துக் கொண்டே செல்வதும் பெரும் துயரமாக இருந்து வருகிறது.இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இவை எடுத்துக்காட்டுகளாகும்.இதுபோல் தொடர்ந்து நடந்துகொண்டால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள நட்பு பாதிக்கப்படும் என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

இது தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிப்பேன். இலங்கைக்குப் போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது என்பதுதான் என் கருத்தும் என்றார் ஜி.கே.வாசன்.

முழு கட்டுரையைப் படிக்க →