முறைகேடாக பயன்படுத்திய 15 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலூர் மண்டல துணை மேலாளர்(விற்பனை) கே.பிரேமா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சோதனையை மேற்கொண்டனர். வந்தவாசி
வந்தவாசியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்தியதாக 15 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்படட்ன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலூர் மண்டல துணை மேலாளர்(விற்பனை) கே.பிரேமா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சோதனையை மேற்கொண்டனர். வந்தவாசி பஜார் வீதி, கோட்டை மூலை, தேரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் இக்குழுவினர் சோதனை மேற்கொணடனர். அப்போது முறைகேடாக பயன்படுத்தியதாக 15 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.மேலும் செய்யாறில் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட சோதனையில் 20 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கே.பிரேமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.