செப்.27க்குள் மீனவர்களை விடுவிக்கவில்லை என்றால் இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் திட்டம்
இலங்கையால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை வரும் செப். 25ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வில்லை என்றால், வரும்
இலங்கையால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை வரும் செப். 25ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வில்லை என்றால், வரும் செப்.27ம் தேதி விசைப்படகுகளில் வெள்ளைக் கொடி ஏந்தி இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.
நாகை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் இந்த 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டதாக மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினர்.