முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் மாநகராட்சி மன்றத்தில் திமுக-அதிமுக உறுப்பினர்கள் கைகலப்பு: அடிதடி ரகளையால் பரபரப்பு

சேலம் மாநகராட்சி மாமன்றத்தில் வழக்கமான கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. மேயர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம், ஆணையர் அசோகன் முன்னிலையில் தொடங்கியது

தற்போதைய செய்திகள்

சேலம் மாநகராட்சி மன்றத்தில் திமுக-அதிமுக உறுப்பினர்கள் கைகலப்பு: அடிதடி ரகளையால் பரபரப்பு

சேலம் மாநகராட்சி மாமன்றத்தில் வழக்கமான கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. மேயர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம், ஆணையர் அசோகன் முன்னிலையில் தொடங்கியது

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம் மாநகராட்சி மாமன்றத்தில் வழக்கமான கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. மேயர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம், ஆணையர் அசோகன் முன்னிலையில் தொடங்கியது

அப்போது, அவசரத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி முரளி பேசும்போது, நகரில் ஓடைகள் 2 மாதம் முன்பே தூர் வாரப்பட வேண்டும் என்று கூறினோம். இப்போது மழை பெய்து, ஓடைகள் அடைக்கப்பட்டு, ஊருக்குள் சாக்கடைத் தண்ணீர் புகுந்து கொண்டு விட்டது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேயர் பதில் அளித்தார். அப்போது, இந்த ஓடைகள் ஆக்கிரமிப்பு திமுக காலத்தில் செய்யப்பட்டது என்றும் அதனால் இப்போது அவற்றை அப்புறப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றும் கூறினார்.

இதற்கு திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று ஒரே குரலில் பேசினர். அப்போது, திமுக கவுன்சிலர் தெய்வலிங்கத்தை அதிமுக கவுன்சிலர் மாரியப்பன் தாக்கினார்.

மேலும் அதிமுகவினர் சிலர் சூழ்ந்து நின்று தாக்கத் தொடங்கினர். அதிமுக திமுக பெண் கவுன்சிலர்கள் ஒருமையில் திட்டிக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. இந்த ரகளை மற்றும் அடிதடியால் மாநகராட்சி மன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →