முகப்பு
தற்போதைய செய்திகள்

விசாரணைக் கைதி மரணம் : பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில், முருகன் உடலை பெறுவது குறித்தும், அவரது குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு மற்றும் நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சம்பவத்துக்குக் காரணமான பண்ருட்டி போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

பண்ருட்டி வட்டாட்சியர்  அலுவலகத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில், முருகன் உடலை பெறுவது குறித்தும், அவரது குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு மற்றும் நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சம்பவத்துக்குக் காரணமான பண்ருட்டி போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று காலை நடந்த பேச்சுவார்த்தையின் போது அடிதடி ஏற்பட்டதை அடுத்து, கூட்டத்துக்கு அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு முக்கிய நபரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பண்ருட்டி ஆய்வாளரை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்வது, குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கும், வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →