முகப்பு
தற்போதைய செய்திகள்

விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார் விஜயகாந்த்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜரானார்.

Updated On : 30 செப்டம்பர், 2013 at 11:59 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:31 PM

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாததால்,  கடந்த 25ம் தேதி விஜயகாந்துக்கு எதிராக விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி அவர் தரப்பில் மனு செய்யப்பட்டது. அதற்காக நீதிமன்றத்தில் விஜயகாந்த் இன்று ஆஜரானார்.

இதையடுத்து வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.