ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கு: சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி மரவனேரி பகுதியில் உள்ள
தற்போதைய செய்திகள்ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கு: சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி மரவனேரி பகுதியில் உள்ள
ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி மரவனேரி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் வேறு சில கொலை வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸôர் கூடுதல் அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த அவகாசம் ஏப்ரல் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், டி.எஸ்.பி. ராஜன், ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயலட்சுமியிடம் குற்றப்பத்திரிகையை புதன்கிழமை தாக்கல் செய்தனர்.
சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், சுமார் 9 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.