சிதம்பரம் நீதிமன்றத்தில் மெகா லோக்அதாலத்! 1013 வழக்குகள் தீர்வு
கடலூர் மாவட்ட இலவச சட்டப்பணிகள் குழு சார்பில் அதன் தலைவரும், சார்பு நீதிபதியுமான ஜே.ராதிகா தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடியது. இதில் ரூ.2 கோடி, 51 லட்சத்து 31 ஆயிரத்து 730
சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் மெகா லோக்அதாலத் (மிகப்பெரிய அளவிலான மக்கள்நீதிமன்றம்) சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட இலவச சட்டப்பணிகள் குழு சார்பில் அதன் தலைவரும், சார்பு நீதிபதியுமான ஜே.ராதிகா தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடியது. இதில் ரூ.2 கோடி, 51 லட்சத்து 31 ஆயிரத்து 730 தொகைக்கான 1013 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை உரிமையியில் நீதிபதி எஸ்.செந்தில்பாபு, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.சுரேஷ்குமார், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.மந்திரி, மூத்த வழக்கறிஞர் ஏ.சம்பந்தம், வழக்குரைஞர் ரகோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.