தடையின்றி வாரியம் செயல்பட ஒத்துழைப்பு தரும் கட்சிக்கு ஆதரவு: தையற்கலை தொழிலாளர் சங்கம்
சிதம்பரம் ஆறுமுகநாவலர் மடத்தில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் லவ்லி பாலகிருஷ்ணன் தலைமை
தடையின்றி வாரியம் செயல்பட ஒத்துழைப்பு தரும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிதம்பரம் ஆறுமுகநாவலர் மடத்தில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் லவ்லி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கடலூர் மாவட்டத் தலைவர் நாகராஜன், செயலாளர் பி.நந்தகோபால், பொருளாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட துணைச் செயலாளர் முகிலன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கடலூர் மாவட்ட தையற்கலை தொழிலாளர் சங்கத்தை கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு என இரண்டாக பிரிந்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 55 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாத பென்ஷன் தொகை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.