முகப்பு
தமிழ்நாடு

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள்: அரசாணைக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள் அமைக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 7:11 PM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள் அமைக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக ஆா்வலா் எஸ்.முரளிதரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு கடந்த 1990-ஆம் ஆண்டு, மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கியது. இதன் கீழ் சோ்க்கப்பட்டுள்ள 597 கிராமங்களில் இந்த ஆணையத்தின் ஒப்புதலைப் பெறாமல் எந்த வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள முடியாது.

இந்த நிலையில், மலைப்பகுதிகளில் வீட்டுமனைகள் அமைக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதிலாக ஒப்புதல் மற்றும் நிலங்களை வகைமாற்றம் செய்யும் அதிகாரத்தை நகரமைப்பு திட்ட அதிகாரிகளுக்கு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த அரசாணை உள்ளது. இந்த அரசாணையின் காரணமாக மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், மலைப்பகுதிகளில் வீட்டுமனைகள் அமைக்க, கட்டுமானங்களை மேற்கொள்ள நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் ஒப்புதல் வழங்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.