முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்களித்த வேட்பாளர்கள்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், வேட்பாளருமான தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை வாக்களித்தனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், வேட்பாளருமான தொல்.திருமாவளவன், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

சிதம்பரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், கடலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் சுதாமணிரத்தினம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

கடலூர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.