முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு சீல் வைப்பு

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அனைத்து தனியார் நிறுவனங்களும் வியாழக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

திருநெல்வேலியில் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி வியாழக்கிழமை இயங்கிய பிரபல ஜவுளி நிறுவனத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அனைத்து தனியார் நிறுவனங்களும் வியாழக்கிழமை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவருமான மு. கருணாகரன் உத்தரவிட்டார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கியது. இதையடுத்து மாநகராட்சி ஆணையரும், உதவி தேர்தல் அலுவலருமான அர. லெட்சுமி தலைமையில் அதிகாரிகள் மேற்கண்ட கடைக்கு சீல் வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →