முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவம்: 25 பேர் கைது

சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் வியாழக்கிழமை இரவு தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக 25 பேரை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை மாலை வடக்குமாங்குடியைச் சேர்ந்த பத்மநாபன் (45), கஜேந்திரன் (40), கதிரவன் (30), விஜயன் (19), ராம்குமார் (18), கலைச்செல்வன் (18) உள்ளிட்ட 25 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.