சிதம்பரம் சிவகாமி அம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் சிவகங்கையின் மேற்கு பிரகாரத்தில், வடக்கு கோபுரத்தின் அருகாமையில் தனிக்கோயிலாக ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்பணி
பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தனி்க்கோயிலாக அமைத்துள்ள ஸ்ரீசிவகாமசுந்தர் அம்மன் கோயில் திருப்பணி தொடக்கத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பாலாயம் பூஜை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் சிவகங்கையின் மேற்கு பிரகாரத்தில், வடக்கு கோபுரத்தின் அருகாமையில் தனிக்கோயிலாக ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்பணி மேற்கொள்ள வியாழக்கிழமை (24-04-2014) காலை 10 மணிக்கு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் விமானம் மற்றும் ராஜகோபுர விமானம், ஸ்ரீ சித்ரகுப்தர் விமானம் ஆகியவற்றிற்கு பாலாலயம் பூஜை, பொதுதீட்சிதர்களால் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பந்தக்கால் முஹுர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.