முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது, கார் மோதிய விபத்தில் இருவர் சாவு

சிதம்பரம் அருகே தெற்குபூவாணிகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), குறிஞ்சிப்பாடி தாலுக்கா வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் (24) ஆகிய இருவரும் திங்கள்கிழமை காலை மோட்டார்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

சிதம்பரம் அருகே திங்கள்கிழமை காலை மோட்டார் சைக்கிள் மீது, கார் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர்.

சிதம்பரம் அருகே தெற்குபூவாணிகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), குறிஞ்சிப்பாடி தாலுக்கா வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் (24) ஆகிய இருவரும் திங்கள்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டிச் சென்றார். கடலூர்-சிதம்பரம் சாலையில் ஆணையம்பேட்டை எனுமிடத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியது. இவ்விபத்தில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமுற்ற மணிகண்டன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.