முகப்பு
தற்போதைய செய்திகள்

வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம்,கீரமங்கலம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் குளம்,ஏரிகள்,ஆழ்குழாய் கிணறுகள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

ஆலங்குடி பகுதிகளில் வாழை உற்பத்தி குறைந்த போதிலும் வாழைத் தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம்,கீரமங்கலம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் குளம்,ஏரிகள்,ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு வாழையை அதிகளவில் சாகுபடி செய்து வந்தனர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் போதியளவு பருவ மழை பெய்யாததை அடுத்து குளங்கள்,ஏரிகள் வறண்டு கிடக்கிறது.மும்முனை மின்சாரம் குறைந்த அளவே வழங்கப்படுவதால் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வாழைக்கு போதியளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகியதாலும்,இடுபொருள்களின் செலவீனம் அதிகரித்தாலும் விவசாயிகளுக்கு வாழைச் சாகுபடி தொடர் நஷ்டத்தை தந்தது.இதனால் குறைந்த நேரம் வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தால் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு குறுகிய கால சாகுபடி செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலானோர் வாழை சாகுடியை தவிர்ததால் பெருமளவு வாழை உற்பத்தி குறைந்தது.எஞ்சிய விவசாயிகள் தண்ணீர் பிரச்னை,ஓராண்டுக்கு மேலான உழைப்பு,இடுபொருள்களின் செலவீனம் அதிகரிப்பு ஆகியவற்றை கடந்து விளைவித்த வாழைத் தாரின் விலை இப்பகுதி  ஏல மண்டிகளில் ரூ.100,150க்கும் விலை போவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இதுகுறித்து கீரமங்கலம் பகுதி விவசாயி தங்கபாண்டியன் கூறியது:ஒரு வாழைக் கன்று ரூ.30 வரை கொடுத்து வாங்கி,உரம்,மருந்து,கம்பு என செலவு செய்து அதை பராமரித்து 10 மாதங்கள் வளாóத்து முடிக்கும்போது ஒரு  வாழை தாருக்கு ரூ. 200 வரை செலவாகிறது.ஓராண்டுக்கு மேல் எங்கள் உழைப்பை போட்டு,இவ்வளவு செலவு செய்து வாழையை விளைவித்து ஏல மண்டிகளுக்கு கொண்டு சென்றால் ரூ.150 க்கு விலை போகிறது.இதனால் ஒரு வாழைத்தாருக்கு ரூ.50 நஷ்டம் ஏற்படுகிறது.மேலும் இயற்கை சீற்றத்தால் வாழை தார்கள் மரங்களுடன் ஒடிந்து சாயும் போது பலத்த இழப்பு எற்படுகிறது. அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கு எடுக்கிறார்கள். ஆனால் இதுவரை அரசு எந்த இழப்பீடும்  வழங்கவில்லை என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →