மதுரை அவனியா மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி ராதிகா(35). இவர்களது மகன் வசந்த பாலமுருகன்(17) இவர்கள் மூவரும் மோட்டர் சைக்கிளில் செத்தானிய புரத்திலிருந்து பைபாஸ் சாலையை நோக்கி சென்றனர். இந்நிலையில் அரசரடியிலிருந்து ஆரப்பாளையம் நோக்கி வந்த தண்ணீர் லாரி இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது பின்பக்கத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராதிகா, வசந்தபாலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாலமுருகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து கரிமேடு போலீஸார் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.