திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா செவ்வாய்;கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு இத்திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.40 மணிக்கு கடக லக்னத்தில் கொடிமரத்தில் காப்பு கட்டிய மு.குட்டிராஜா வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து எஸ்.வேலாண்டி ஓதுவார் திருமுறை பாராயணம் பாடினார். மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திருக்கோயில் விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், முதுநிலை கணக்கு அலுவலர் மூ.ராஜேந்திரன், அலுவலக கண்காணிப்பாளர் கோமதி, திருவிழா கண்காணிப்பாளர் ரவீந்திரன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் ரா.கார்த்திகேயன், மணியம்
தமிழரசன், திருக்கோவில் பணியாளர்கள் கோ.வெங்கடேசன், சிவா, கிருஷ்ணமூர்த்தி, தண்டபாணி, ஆ.நெல்லையப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 14-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கடக லக்னத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை
மணிகண்டன், இணை ஆணையர் (பொ) இரா.ஞானசேகர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.