முகப்பு
தற்போதைய செய்திகள்

சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி

சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் 68 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பொதுதீட்சிதர்கள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:29 AM
பகிர்:

நாட்டின் 68-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் 68 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பொதுதீட்சிதர்கள் இன்று காலை 6 மணிக்கு தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர். பின்னர் மேளதாளத்துடன் பொதுதீட்சிதர்கள் தேசியக்கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தில் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.