கிராமத்துக்கு 3 நாள்கள் வராத பேருந்தை மக்கள் சிறைப்பிடிப்பு
கிருஷ்ணகிரியில் இருந்து சந்தூருக்கு கிட்டனூர் என்ற கிராமம் வழியாக இயக்கப்படும் பேருந்து, 3 நாட்களாக
கிருஷ்ணகிரி அருகே நகரப் பேருந்து ஒன்று கிராம மக்களால் சிறைப் பிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் இருந்து சந்தூருக்கு கிட்டனூர் என்ற கிராமம் வழியாக இயக்கப்படும் பேருந்து, 3 நாட்களாக கிராமத்துக்கு வரவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் அந்த கிராமம் வழியாக வந்த அரசுப் பேருந்தை மக்கள் சிறைப்பிடித்தனர். அதிகாரிகள் வந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விடுவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.