முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறில் பெண் காவலரை கொல்ல முயன்ற சம்பவம்: காவலர் பணியிடை நீக்கம்

மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் காதலை ஏற்க மறுத்த பெண் காவலரை கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற காவலர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:34 AM
பகிர்:

மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் காதலை ஏற்க மறுத்த பெண் காவலரை கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற காவலர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள காவலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் அனுஷா (22).
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பருத்திப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரராஜா (25). இருவரும் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் 9 ஆம் அணியில் காவலர்களாக பணி செய்து வருகின்றனர்.
ராமச்சந்திரராஜா, அனுஷாவை காதலித்து வந்தாராம். அனுஷா இதனை ஏற்கவில்லையாம். இதனிடையே வியாழக்கிழமை இரவு அனுஷாவை சந்தித்த ராமச்சந்திரராஜா மீண்டும் வற்புறுத்தினாராம். அனுஷா மறுத்ததால் ஆத்திரத்தில்  துணியால் ராமச்சந்திரராஜா, அனுஷாவின் கழுத்தை நெரித்து கொல்ல
முயன்றாராம்.

இதில் மயக்கமடைந்த அனுஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சனிக்கிழமை காவலர் ராமச்சந்திரராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சிறப்பு காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள ராமச்சந்திரராஜாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →