ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப நல நீதிமன்றம் திறப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே, முக்கிய நீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடங்களை ஆய்வு செய்து விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி்மன்றம் உள்ளிட்ட முக்கிய நீதிமன்றங்களை ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைத்து செயல்படுத்த அனுமதி வழங்கினர். இதன் அடிப்படையில் மாவட்டம் பிரிக்கப்பட்டதிலிருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய நீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குடும்ப நல நீதிமன்றத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.