முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவர் தீக்குளித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:36 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கூமாப்பட்டி, ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் தர்மலிங்கம் (17). இவர் கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவரது தந்தை சந்தா  கட்டுவதற்கு கொடுத்த பணத்தை ஓராண்டாக தர்மலிங்கம் கட்டாமல் செலவழித்துவிட்டாராம். சந்தா முடிந்துவிட்டதாக நினைத்து ஓராண்டு கழித்து முத்தையா போய் சந்தா கட்டிய இடத்தில் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் சந்தா கட்டிய இடத்தில் உனது மகன் சந்தா கட்டவே இல்லை என்று கூறியுள்ளனர்.

வீட்டில் வந்து மகனிடம் ஏன் ஓராண்டாக சந்தா பணத்தைக் கட்டாமல் ஏமாற்றியுள்ளாய் என்று கேட்டுள்ளார் முத்தையா. இதில் மனம் உடைந்த தர்மலிங்கம், 22-ம் தேதி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டாராம். மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி, புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →