முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே இளைஞர் தலைத் துண்டித்து கொலை

திருநெல்வேலி அருகே புதன்கிழமை வேன் ஓட்டுநர் ச. அங்கப்பன் (30) தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:34 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே புதன்கிழமை வேன் ஓட்டுநர் ச. அங்கப்பன் (30) தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் அங்கப்பன் (30). வேன் ஓட்டுநர். புதன்கிழமை காலை வீட்டில் இருந்த அங்கப்பனுக்கு போன் வந்ததாம். இதையடுத்து அங்கப்பன் தனது  மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி அடுத்துள்ள ஸ்ரீராமன்குளத்திற்கு வந்து கொண்டிருந்தாராம்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அங்கப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இதில் அங்கப்பன் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார். தகவலறிந்த டி.எஸ்.பி. மலைச்சாமி, காவல் ஆய்வாளர்கள் சார்லஸ், கலைமணி சம்பவ இடத்திற்கு சென்று அங்கப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். திருநெல்வேலி எஸ்.பி. கே.எஸ். நரேந்திரன்நாயர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அங்கப்பன் கொலை செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →