முகப்பு
தற்போதைய செய்திகள்

வெறிநாய் கடித்ததில் 4 செம்மரி ஆட்டுக்குட்டிகள் சாவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்கிழமை அதிகாலை  வெறிநாய் கடித்ததில் 4 செம்மரி ஆட்டுக் குட்டிகள் செத்தன. தொடர்ந்து நடைபெறும் சம்பவத்தால்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்கிழமை அதிகாலை  வெறிநாய் கடித்ததில் 4 செம்மரி ஆட்டுக் குட்டிகள் செத்தன. தொடர்ந்து நடைபெறும் சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மணப்பாறை அருகே உள்ள வடக்குசேர்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் விவசாயி. இவர் 30 செம்மரி ஆடுகள் வீட்டின் அருகே ஆட்டுக் கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை ஆடுகள் சத்தமிடுவதை அறிந்த செல்வராஜ் எழுந்து பார்த்த போது ஆட்டுக் கொட்டகையில் இருந்த ஆடுகளை இரண்டு வெறிநாய் கடித்துக் குதறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே வீட்டில் உள்ளவர்கள் எழுந்து வந்து நாய்களை விரட்டி அடித்தனர்.

பின்னர் கொட்டகையின் உள்ளே சென்று பார்த்த போது 4 செம்மரி ஆட்டுக் குட்டிகள்   பரிதாபமாக இறந்து கிடந்த்து. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த மரவனூர் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆட்டுக்குட்டிகளை பிரேத பரிசோதனை செய்த பின் குழி  தோண்டி புதைத்தனர்.

கடந்த சில தினங்களில் மட்டும் வடக்குசேர்பட்டியில் வெறிநாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து இதுபோன்று வெறிநாய்கள் ஆடுகளை வேட்டையாடி வருவதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வடக்குசேர்பட்டியில் அதிக அளவில் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழுகின்ற நிலையில் இதுபோன்று அவ்வபோது ஆடுகள் இறக்கின்ற நிலையால் மக்கள் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →