முகப்பு
தற்போதைய செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் மகன் கனகசபாபதி (47). இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்ததாம். இதனால் அவதிப்பட்ட கனகசபாபதி பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வலியால் அவதிப்பட்ட அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அவரது அண்ணன் கலைச்செல்வன் (42) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மனநலன் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி விஷம் குடித்து சாவு:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிவேல் மகள் கலையரசி (16). இவர், வேப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். மனநலன் பாதிக்கப்பட்ட கலையரசி கடந்த 17ம் தேதி மாலை அவரது வீட்டில் விஷம் குடித்தார். திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோதிவேல் அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மலரழகன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

விஷம் குடித்து பெண் தற்கொலை:

குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் மனைவி செந்தாமரை (30). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அபிஷேக் (6), அனு ஷ்ரீ (4) ஆகிய குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த செந்தாமரை வெள்ளிக்கிழமை மாலை விஷம் குடித்தார். பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து கலையரசன் அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.   

முழு கட்டுரையைப் படிக்க →