முகப்பு
தற்போதைய செய்திகள்

பொறையாரில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட சென்ற தொழிலாளர்கள் 60 பேர் கைது

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தொழிலாளர்கள் 60 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:48 AM
பகிர்:

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தொழிலாளர்கள் 60 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொறையாறு கிளையில் பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பொறையாறு குமரன் கோயில் பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு போக்குவரத்து கழக பணிமனையை நோக்கி முற்றுகையிட சென்றனர்.பழைய பேருந்து நிலையம் அருகே ஊர்வலம் வந்தபோது நாகை நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி துரைராஜ்,பொறையாறு காவல் ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி அதில் கலந்து கொண்ட 60 பேரை கைது செய்தனர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை செம்பனார்கோயில் தெற்கு ஒன்றிய திமுக செயலர் நிவேதா முருகன்,பேரூர் அவைத்தலைவர் கந்தசாமி  உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் காரணமாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் காலை முதலே ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Advertisement

இதனிடையே பொறையாறு கிளையிலிருந்து 30 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டன.இதனால பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments