முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் போலீசை கண்டித்து  பாஜக திடீர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாக புகார் தெரிவித்து காவல்துறை ஆய்வாளரை கண்டித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை அக்கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாக புகார் தெரிவித்து காவல்துறை ஆய்வாளரை கண்டித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை அக்கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தச்சநல்லூர் மண்டல பொதுச்செயலர் பி. செந்தில்குமார் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்ததற்கு ஆட்சேபம் தெரிவித்தும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளரின் நடவடிக்கையை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க திரண்ட அக்கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மு. பாலசுப்பிரமணியன், எஸ்.சி. அணி மாவட்டத் தலைவர் முருகதாஸ், மாவட்ட துணைத் தலைவர் அருள்ராஜ், அமைப்பு பொதுச்செயலர் டி.வி. சுரேஷ், வழக்குரைஞர் அணி மாவட்டத் தலைவர் முத்துபாண்டி, தச்சை மண்டலத் தலைவர் எஸ். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →