தற்போதைய செய்திகள்

திருச்செந்தூரில் மாசித்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கே சுப்பிரமணியன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசித்திருவிழாவையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 5.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்பு கொடி மரத்திற்கு தீபாராதனை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவிலின் இணை ஆணையர் (பொறுப்பு) அன்பு மணி, தக்கார் கோட்டை மணிகண்டன், இந்து முன்னணி மாநில தலைவர் அரசுராஜா, துணைத் தலைவர் ஜெயகுமார், திருவாவடுதுறை ஆதீன தவத்திரு அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை தக்கார் கருத்தபாண்டிநாடார், கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ராஜமோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT