பெண்ணை விறகுக் கட்டையால் அடித்த அரசுப் பள்ளி ஆசிரியை கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடத் தகராறில் பக்கத்து வீட்டுப் பெண்ணை விறகுக் கட்டையால் அடித்துக் காயப்படுத்திய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடத் தகராறில் பக்கத்து வீட்டுப் பெண்ணை விறகுக் கட்டையால் அடித்துக் காயப்படுத்திய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது பக்கத்தில் குடியிருந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி ஆண்டாள் (44). ஆண்டாள், முத்துலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீரலட்சுமி தனது வீட்டின் விறகுக் கட்டைகளை, வீட்டை ஒட்டி அடுக்கி வைத்திருந்துள்ளார். இதில் ஆசிரியை ஆண்டாளுக்கும் வீரலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமுற்ற ஆசிரியை ஆண்டாள் விறகுக் கட்டையால் வீரலட்சுமியை அடித்துள்ளார்.
Advertisement
இதில் காயமுற்ற அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வன்னியம்பட்டி போலீஸில் வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியை ஆண்டாளைக் கைது செய்தனர்.