தற்போதைய செய்திகள்

மதுரை விமானநிலையத்தில் விதிக்கப்பட்டுள்ள பார்வையாளர் களுக்கான புதிய கட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சில விமானங்கள் சென்று வருகின்றன. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவேற்பதற்காக பொதுமக்கள் விமான நிலையத்திற்க்கு வருகின்றனர்.

ஜெயப்பாண்டி

மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சில விமானங்கள் சென்று வருகின்றன. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவேற்பதற்காக பொதுமக்கள் விமான நிலையத்திற்க்கு வருகின்றனர்.

இவர்களுக்கு பார்வையாளர்கள் அறை வரை செல்ல 45 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஆனால் திடீர் என கட்டணச்சிட்டு வாங்கியவர்களையும் அடையாள சீட்டு இல்லை என்றால் அனுமதிக்க முடியாது என கூறி வெளியே அனுப்பி விடுகின்றனர்.

ஆனால் அடையாள சீட்டு குறித்து எந்த வித அறிவிப்பும் விமான நிலையத்தில் வைகப்படவில்லை இதுபோல ஏராளமானபேர்

 சீட்டு வாங்கியும் உள்ளே செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். இதுகுறித்து விமான நிலைய டெரிமினல் கண்காணிப்பாளர்  சிவக்குமாரிடம் கேட்ட போது பாதுகாப்பு கருதி கட்டுபாட்டுகள் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து முறையான அறிவிப்பு எழுதி வைக்கப்படும் என்றார். ஆனால் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் நிபந்தனைகளும் விதிப்பதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT