சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
நெய்வேலி வழக்குரைஞர் பானுதேவியை திருமணம் செய்ய இருந்த மும்பை தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளர் சம்பத்குமார் திருமண நேரத்தில் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை
சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி வழக்குரைஞர் பானுதேவியை திருமணம் செய்ய இருந்த மும்பை தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளர் சம்பத்குமார் திருமண நேரத்தில் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாமல் பாரபட்சம் காட்டு காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும், வழக்குரைஞர்களை தரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் இடமாற்றம் செய்யக் கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ரகோத்தமன், செயலாளர் அந்தோணி, துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞர்களும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.