ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதியதில் தாய், மகன் பலி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செவ்வாய்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செவ்வாய்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலம்புரம் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. துப்புரவுத் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் (40). இவர்களது மகன் கோவிந்தராஜ் (19).
காளியம்மாளும் கோவிந்தராஜூம், ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். செவ்வாய்கிழமை வேலைக்கு இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதி போக்குவரத்து அலுவலகம் எதிரே மதுரை நோக்கி சென்ற லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கவிழந்தது. இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் காளியம்மாள் உயிரிழந்தார்.
வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை கணேசனைக் கைது செய்தனர்.