முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுராந்தகம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிச்சல்

சென்னை-புதுச்சேரி பாசஞ்சர் இரயில் காலை 8.30 மணிக்கு  மதுராந்தகம் ரயில்நிலையத்துக்கு வந்தது. அப்போது, ரயில் என்ஜின் தண்டவாளத்திலிருந்து ஒருவித சத்தம் கேட்டு டிரைவர் நிறுத்தினார்.

Updated On : 16 பிப்ரவரி, 2014 at 2:59 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:55 AM

மதுராந்தகம் ரயில் நிலையத்துக்கு வந்த புதுச்சேரி பாசஞ்சசர் ரயில் தணடவாளத்தில் ஏற்பட்ட விரிச்சல் ஞாயிற்றுக்கழமை ஏற்பட்டது.

சென்னை-புதுச்சேரி பாசஞ்சர் இரயில் காலை 8.30 மணிக்கு  மதுராந்தகம் ரயில்நிலையத்துக்கு வந்தது. அப்போது, ரயில் என்ஜின் தண்டவாளத்திலிருந்து ஒருவித சத்தம் கேட்டு டிரைவர் நிறுத்தினார். அதன்பிறகு தண்டவாளத்தை பார்த்தபோது தண்டவாளத்தில் விச்சல் ஏறபட்டு இருந்ததை கண்டறியப்பட்டது. உடனடியாக செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் சுமார் 1 மணி நேரத்துக்கு பின் அதை சரி செய்தனர். இதனால், சென்னை-புதுச்சேரி பாசஞ்சர் இரயில் 1 மணி நேர காலதாமதமாக மதுராந்தகம் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது.

ரயில் டிரைவர் கவனிக்காமல் இருந்தால் மாபெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். இதனால் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். இது குறித்து ரயில்வே துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.