முகப்பு
தற்போதைய செய்திகள்

புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தி.மு.க. ஆட்சியில் சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் அப்போதைய ஆட்சியல் திறந்து வைக்கப்பட்டு தலைமை செயலகம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

தி.மு.க. ஆட்சியில் சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் அப்போதைய ஆட்சியல் திறந்து வைக்கப்பட்டு தலைமை செயலகம் செயல்பட்டு வந்தது. இதனையடுத்து வந்த அதிமுக அரசு இந்த கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்குரைஞர் வீரமணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பால்வசந்த்குமார், தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா 21–ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதிய மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.