தமிழகத்தில் போட்டியிட சமாஜ்வாதி கட்சியில் பிப்.27-ல் விருப்பமனு தாக்கல்
தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கட்சி நிர்வாகிகள் வருகிற பிப்.27-ம் தேதி திருச்சியில் விருப்பமனு
தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கட்சி நிர்வாகிகள் வருகிற பிப்.27-ம் தேதி திருச்சியில் விருப்பமனு பெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் தெரிவித்துள்ளது. முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிகட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள், விருப்ப மனுக்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜா ஹோட்டல் மாடியில் எனது தலைமையிலான கட்சி மாநில தேர்தல் பணிக்குழுவினரிடம் வருகிற பிப்.27-ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அளிக்கலாம் என இளங்கோயாதவ் தெரிவித்துள்ளார்.