முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலை!

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 8 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்து, அருகாமையில் உள்ள நீர்தேக்க குளத்தில் விட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 8 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்து, அருகாமையில் உள்ள நீர்தேக்க குளத்தில் விட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஊருக்குள் முதலை ஒன்று புகுந்தது. இதனை பார்த்த ஊர்மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் மற்றும் களப்பணியாளர்கள் விரைந்து சென்று முதலையை பிடிக்க முயன்றனர். முதலை 8 அடி நீளமும், 200 கிலோ எடையுடன் இருந்ததால், மிகவும் ஆக்ரோஷத்துடன் அச்சுறுத்தியது.

பின்னர் கடலூரைச் சேர்ந்த வன ஆர்வலர் பூனம்சந்த் மற்றும் முதலை பிடிக்கு நந்திமங்கலம் ராஜூ குழுவினரை வரவழைத்து நள்ளிரவு 1 மணி முதல் போராடி காலை 6 மணிக்கு முதலையை பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்தில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.