சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: வீரப்ப மொய்லி
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்ட விலை புத்தாண்டு முதல் ரூ.220 அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா, மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும்
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்ட விலை புத்தாண்டு முதல் ரூ.220 அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா, மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விலைவாசி உயர்வு குறித்து பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும ஆண்டுக்கு 9 சிலிண்டர் வரை மானிய விலையில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்கள் வெளிச்சந்தை விலையில் விற்கப்படுவதாகக் கூறினார். சர்வதேச சந்தை நிலவரத்தால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, எரிவாயு விலையை உயர்த்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் நாட்டின் மொத்த குடும்பங்களில் மானியம் இல்லாத சிலிண்டரை வாங்கும்10 சதவீதத்தினர் மட்டுமே இந்த விலை உயர்வால் பாதிப்பார்கள் என்றும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.