தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு உயர்நீதிமன்றம் தடை
பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
நீதிபதி சுதீஷ் கே அக்னிஹோத்ரி, கேகே சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
சுந்தரராஜன் என்பவர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். எந்த விவகாரத்திலும் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வழியில்லை என்று கூறி மனு தாக்கல் செய்தார்.
பசுமைத் தீர்ப்பாயத்துக்கு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய உரிமை இல்லை என்று மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் வாதாடினார்.இதை அடுத்து உயர்நீதிமன்றம் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.