தோற்கக் கூடிய கட்சிக்கு தலைமை ஏற்க பிரதமர் தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மன்மோகன்சிங் உரைக்கு பதிலளித்து
பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் உரைக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறியதாவது:
தோற்க கூடிய காங்கிரஸ் கட்சிக்குக் தலைமை ஏற்க மன்மோகன் சிங் தயாராக இல்லை. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் என்பது பிரதமருக்கு தெரியாதது அல்ல. நாட்டின் அடுத்த பிரதமராக மோடி தான் தேர்வு செய்யப் படுவார். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பாஜக நாளை முதல் தொடங்குகிறது என்றார்.