உ.பி.:பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ்: ஜன18ல் தொடக்கம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டம் வரும் ஜன 18 ஆம் தொடங்கப்படும் என்று அம்மாநில மருத்துவ இயக்குநர் ஆர்.பி. குப்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரசவத்தின் போது அவசர உதவிக்காக ஆம்புலன் சேவை தொடங்கப்படவுள்ளது இந்த ஆம்புலன்சில் அவரச சிகிச்சை வசதிகள் மற்றும் டெலிவரி ஆகும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2 பெண் உதவியாளர்கள் ஆம்புலன்சில் நியமிக்கப்படவுள்ளனர். என்றார். மேலும முதற்கட்டமாக 15 ஆம்புலன்சுகள் கோரக்பூர் மாவட்ட மகளிர் நல மருததுவமனைக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.