108 ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்ட அறிவிப்பு வாபஸ்
இன்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 108 அவசர ஊர்தி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, உட்பட பல்வேறு கோரிக்கைகளை
இன்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 108 அவசர ஊர்தி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நிர்வாகத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 108 அவசர ஊர்தி ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.