முகப்பு
தற்போதைய செய்திகள்

இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி

சிதம்பரம் அருகே புவனகிரி தேவாங்கர் சமூக மஹாலில் தமிழக இயற்கை உழவர் இயக்கம் சார்பில் மறைந்த இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நினைவேந்தர் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

சிதம்பரம் அருகே புவனகிரி தேவாங்கர் சமூக மஹாலில் தமிழக இயற்கை உழவர் இயக்கம் சார்பில் மறைந்த இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நினைவேந்தர் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னிலை வகித்தனர். ராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுப.கோவிந்தராஜன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகம், பாலையூர் ஆர்.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.தேவதாஸ்படையாண்டவர், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி, மீத்தேன் எரிவாயு எதிப்பு இயக்கத் தலைவர் திருவரசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர். குறிச்சி திருஞானம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments