லாரி மீது அரசு பஸ் மோதல்: 5 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது அரசு பஸ் மோதியதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது அரசு பஸ் மோதியதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், அழகாபுரியை அடுத்துள்ள வலையபட்டி விலக்கு அருகே முன்னல் சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக பஸ் மோதியது.
இதில் கூடங்குளம், நாதன்தோட்டத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயகுமாரி (27), பெருமாள் மனைவி பேச்சியம்மாள் (65), பஸ் நடத்துனர் மு.குப்புசாமி (42), பா.நாகராஜ் (37), லாரி டிரைவர் வெ.அழகர் (50) ஆகியோர் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து ஜெயகுமாரி, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த நே.தினேஷ்குமாரை கைது செய்தனர்.