முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜார்கண்டில் நக்சலைட் தலைவர் சுட்டுக்கொலை

ஜார்கண்ட் மாநிலம்,  ராஞ்சி அருகே வனப்பகுதியில் உள்ள லெபெட் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ளதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

ஜார்கண்ட் மாநிலம்,  ராஞ்சி அருகே வனப்பகுதியில் உள்ள லெபெட் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ளதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்தனர். இதைத் தொடர்ந்து, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையில் அங்கு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

 இதில், ரமேஷ்பான் என்ற நக்சலைட் தலைவர் சுட்டு்க் கொல்லப்பட்டார். லால்மோகன் பஹான் என்ற மற்றொரு நக்சலைட் கைது செய்யப்பட்டார். மேலும் நக்சலைட்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.