மதுரை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை
மதுரை மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று மாலை வளையங்குளம் பிரதான சாலையில் கருப்பசாமி கோயில் அருகே வெட்டிக்
மதுரை மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று மாலை வளையங்குளம் பிரதான சாலையில் கருப்பசாமி கோயில் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்று விசாரித்து வருகின்றனர்.