அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
வந்தவாசி-செய்யாறு சாலை, எச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் உள்ள வனப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்சடலம் ஒன்று அழுகிய நிலையில் சனிக்கிழமை கிடந்தது. இச்சடலத்தின்
வந்தவாசி அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
வந்தவாசி-செய்யாறு சாலை, எச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் உள்ள வனப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்சடலம் ஒன்று அழுகிய நிலையில் சனிக்கிழமை கிடந்தது. இச்சடலத்தின் தலைப்பகுதி மட்டும் எலும்புக்கூடாக காணப்பட்டது. இறந்து கிடந்த பெண் நீல மற்றும் மெரூன் வண்ண பூ போட்ட புடவையும், நீல வண்ண ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.