முகப்பு
தற்போதைய செய்திகள்

பைக் மோதி மூதாட்டி சாவு

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள்(62). இவர் சனிக்கிழமை இதே கிராமத்தில் உள்ள இவரது மகன் செல்வராஜின் மளிகை கடைக்குச் சென்று

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

வந்தவாசி அருகே பைக் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள்(62). இவர் சனிக்கிழமை இதே கிராமத்தில் உள்ள இவரது மகன் செல்வராஜின் மளிகை கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்(25) என்பவர் ஓட்டிவந்த பைக் இவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கன்னியம்மாள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்னியம்மாள் சனிக்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் வநத்வாசி வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →