மொபட் மீது பைக் மோதிய விபத்தில் வியாபாரி பலி
நாட்டறம்பள்ளி அடுத்த பதுபேட்டை அருகே பணியாண்டப்பள்ளி குட்டிசானூர் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(58) வியாபாரி. இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டிலிருந்து வியாபாரம் சம்பந்தமாக வெலகல்நத்தம்
தற்போதைய செய்திகள்மொபட் மீது பைக் மோதிய விபத்தில் வியாபாரி பலி
நாட்டறம்பள்ளி அடுத்த பதுபேட்டை அருகே பணியாண்டப்பள்ளி குட்டிசானூர் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(58) வியாபாரி. இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டிலிருந்து வியாபாரம் சம்பந்தமாக வெலகல்நத்தம்
நாட்டறம்பள்ளி அடுத்த பதுபேட்டை அருகே பணியாண்டப்பள்ளி குட்டிசானூர் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(58) வியாபாரி. இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டிலிருந்து வியாபாரம் சம்பந்தமாக வெலகல்நத்தம் நோக்கி தனது மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது மல்லபள்ளி பணந்தோப்பு அருகே எதிரே வந்த பைக் மொபட் மீது மோதியதாம். இதில் சாம்ராஜ் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இதுக்குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.